Product Information

Book Name Islamum ilamaip paruvamum
Author
Publisher Sajithah Book Center
Catagory
Language Tamil
Edition 1st
Binding Paperback
Number of Pages – Pages

நூல் அறிமுகம்:

அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே உங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கும் நபிகளார் கூறும் நல்ல பழக்கங்கள் என்ற இந்த புத்தகமானது. ஒரு முஸ்லிம், அனுதினமும் பழகும் மக்கள் சந்திக்கும் சிரமங்கள், எதிர்கொள்ளும் சவால்கள் என காலை எழுந்தது முதல், உறங்க செல்லும் வரை இறைத்தூதரால் பயிற்றுவிக்கப்பட்ட ஒழுக்க நெறிகளை இயன்றவரை எடுத்து கூறுகிறது நல்லொழுக்கமே அதிக மக்களை சுவர்க்கத்திற்குள் நுழைக்கிறது என்பதால், இந்த புத்தகமானது அந்நல்லொழுக்கங்களை அறிந்து அமல் செய்ய வேண்டும் என்கின்ற உயரிய நோக்கத்தில் தொகுக்கப்பட்டுள்ளது

முஸ்லிம்களின் இளைய தலைமுறை மட்டுமன்றி பொதுவாக எல்லா சமூகத்தின் இளைய தலைமுறையினரும் இன்றைக்குச் சமூகக் கட்டுப்பாடுகளையோ, மூத்தோர் சொற்களையோ பொருட்படுத்துவதே இல்லை. தொழில்நுட்பங்களால் விளைந்த அற்ப சுகங்களுக்கு அடிமையாகி மனம்போன போக்கில் வாழ்க்கை நடத்துகின்றனர். இதனால் ஏற்படும் பாதிப்புகளும் கெட்ட விளைவுகளும் நாளுக்கு நாள் உலகத்தையே அச்சுறுத்திக்கொண்டுள்ளன. மூத்தவர்கள் வாய்மூடி மௌனமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டுள்ளனர். நல்வழி காட்டி, கை கொடுத்து காப்பாற்றத் தவறினால் இளைய தலைமுறையின் சீரழிவால் அனைத்தும் சீர்குலைந்து போகும்.
இந்நூல், ஒவ்வொரு கட்டத்திலும் இளவல்கள் சந்திக்கும் மேடுபள்ளங்களைச் சுட்டிக்காட்டி அவர்களுக்கு விழிப்புணர்வூட்டி நல்ல தலைமுறையாக உருவாக வழி சொல்கிறது. அனைவரும் குறிப்பாக இளவல்கள் நிதானமாக வாசியுங்கள்! அசைபோடுங்கள்!

ReviewsThere are no reviews yet.

Be the first to review “இஸ்லாமும் இளமைப் பருவமும்”

Your email address will not be published. Required fields are marked *