Product Information

நூதனக் கொள்கைகளும் மோசமான விளைவுகளும்

Arabic Title الْبِدَعُ وَآثَارُهَا السَّيِّئَةُ
Tamil Title நூதனக் கொள்கைகளும் மோசமான விளைவுகளும்
Title Noothana Kolgaigalum Moasamaana Vilaivugalum
Author ஷெய்க் அப்துல் அஸீஸ் இப்னு பாஸ்
Translator ஷெய்க் முஸ்தஃபா மவ்லானா & குழு
Edition 1st, 2022
Category Aeedah – Creed, Refutations
Pages 120
Size 14 cm x 21.5 cm
Language Tamil
Binding Soft
Publisher Kugaivaasigal

 இஸ்லாமில் மிக ஆபத்தான பித்அத் (நூதனம்) என்ற கருத்தின் தீமைகளையும் அதன் விளைவுகளையும் எச்சரிக்கும் அரிய நூல்.

நாம் செய்தித்தாள்களில் அடிக்கடி காணும் நூதனமான மோசடிகள், சில நேரங்களில் ஆச்சரியத்தைத் தருகின்றன. ஆனால், உண்மையான பாதிப்பை ஏற்படுத்தும் மோசடி என்பது மதத்தில் உருவாகும் பித்அத் ஆகும். இது முஸ்லிம் சமூகத்தின் உள்ளார்ந்த நம்பிக்கையையும் வணக்கத்தையும் சிதைக்கிறது.

பித்அத் என்பது நபி (ஸல்) மற்றும் அவரின் தோழர்கள் அறியாத, நடைமுறைப்படுத்தாத புதிய வழிபாடுகளும் கொள்கைகளும் ஆகும். இது மதத்தில் புதிதாக சேர்க்கப்படும் போது, ஒரு நல்ல உள்ளம் கொண்ட முஸ்லிமையும் மயக்கத்தில் ஆழ்த்தி, அவர் நாடிய நன்மையை இழக்கச் செய்கிறது. மேலும், அல்லாஹ்வின் அனுமதியில்லாத இந்த செயல்கள் தீமைக்கு மார்க்க அந்தஸ்து அளிப்பதற்குச் சமமாகின்றன.

ஷெய்க் அப்துல் அஸீஸ் இப்னு பாஸ் (ரஹ்) அவர்களின் இந்தப் புத்தகம், முஸ்லிம்களின் மார்க்கத்தை ஊனமாக்கும் இத்தகைய  தெளிவாக எடுத்துரைக்கிறது. முஸ்லிம் வாழ்க்கையைப் பாதுகாக்கும் நோக்கில், பித்அத் எனப்படும் ஆபத்தான நடைமுறைகளின் முகமூடியை கிழித்து எச்சரிக்கை செய்கிறது.

இந்த நூலைப் படிப்பது, உண்மையான இஸ்லாமிய வழிபாட்டை பின்பற்றவும், தவறான கொள்கைகளின் வலையிலிருந்து தப்பிக்கவும் உதவுகிறது. ஒவ்வொரு முஸ்லிமும் கட்டாயம் வாசிக்க வேண்டிய ஒரு முக்கியமான நூல் இது

 

ReviewsThere are no reviews yet.

Be the first to review “நூதனக் கொள்கைகளும் மோசமான விளைவுகளும்”

Your email address will not be published. Required fields are marked *