நபிமார்கள், சஹாபாக்கள், நல்லடியார்களின் முழு வாழ்வும் மறுமையை நோக்கியே இருக்கும். அவர்கள் சிறிதும் உலக இன்பங்களுக்கு அடிமையாகிவிட மாட்டார்கள். மறுமை பற்றிய சிந்தனையிலேயே அவர்கள் வாழ்வை அர்ப்பணிப்பார்கள். அதற்கான ஏற்பாடுகளை விரைந்து இவ்வுலக வாழ்வில் ஈட்டிக் கொள்வார்கள். அற்ப இவ்வுலகத்திற்கு பாடுபட மாட்டார்கள். மறுமைக்கான விளைச்சளை இவ்வுலகில் விதைப்பார்கள்.