நூல் அறிமுகம்:
கடந்த கால வரலாற்றை மறந்த சமுதாயம் நிகழ்காலத்தை நெறிப்படுத்தவும் முடியாது எதிர்காலத்தை ஒளிமயமாக்கவும் முடியாது. இந்த வகையில் வரலாறு என்பது முக்கியத்துவம் பெறுகின்றது குறிப்பாக இஸ்லாத்தின் உயர்வையும், அந்தஸ்தையும் உரிய முறையில் அறிய வேண்டுமென்றால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துவக்கம் முதல் இன்றைய தினம் வரை இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக தமது உதிரத்தையும் உயிரையும் உடல் உறுப்புக்களையும் உழைப்பையும் உரமாகப் பாய்ச்சியவர்களின் வரலாற்றைத் தெரிந்திருப்பது அவசியமாகும்.
இஸ்லாத்தை வளரப்பதிலும் காப்பதிலும் கடைபிடிப்பதிலும் அவர்கள் காட்டிய தியாகம் உறுதி நமது ஈமானுக்கு புத்துனர்ச்சியையும், உணர்வுகளுக்கு ஊக்கத்தையும் அளிக்கவல்லதாகும்.
இந்த அடிப்படையில் தியாகச் சுடர்களான நபி ஸல்வல்லாஹு அலைஹி வஸலலம் அவர்களது நல்லற நபித்தோழர்கள் சிலரின் வாழ்வையும் பணியையும் சுருக்கமாக உங்கள் முன் வைத்துள்ளேன். தொடர்ந்து மற்றும் பல தாபிஈன்கள் இமாம்கள், அறிஞர்கள் என பலரின் வாழ்வையும் மக்கள் மன்றத்தில் வைக்கும் எண்ணம் உண்டு. அல்லாஹ்தான் அதற்கு அருள் புரிய வேண்டும்.
– மௌலவி இஸ்மாயில் ஸலஃபி
நபித்தோழர்கள் வரலாறு