நூல் அறிமுகம்:
‘நபிவழி மருத்துவம்’ என்பது நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அறிவித்துக் கொடுத்த மருத்துவத் தகவல்கள் ஆகும். மனிதப் பயன்பாட்டிற்காகவே யாவற்றையும் படைத்துள்ள உயர்ந்தோன் அல்லாஹ் மனிதனுக்கு ஏற்படும் நோய்களைத் தீர்த்துக் கொள்வதற்கான வழிமுறைகளையும் நபி (ஸல்) அவர்கள் மூலம் காண்பித்தான்.
மனநோய்களைக் களைந்து புத்துணர்வூட்ட மகத்தான வேதமான திருக்குர்ஆனையும் உடல் தொடர்பான நோய்களைத் தீர்த்துக்கொள்ள பல்வேறு மூலிகைகளையும் உயர்ந்தோன் அல்லாஹ் மனித சமுதாயத்திற்கு ஓர் அருட் கொடையாகவே வழங்கியுள்ளான்.
அவன் படைத்த ஒவ்வொரு பொருளும் பல்வேறு பயன்களைக் கொண்டுள்ளது. அதையே நபி (ஸல்) அவர்களின் மூலம் மனித சமுதாயத்திற்குத் தெளிவுபடுத்தியுள்ளான். அவை என்ன என்பதை இந்நூல் முழுக்க நீங்கள் காணலாம்.
#நபிவழி மருத்துவம்