முஸ்லிம் சமூகத்தில் நபிகளார் மரணத் துக்கத்தின் தாக்கங்கள்

Fast Delivery · calculating…

Kugaivaasigal Publication

முஸ்லிம் சமூகத்தில் நபிகளார் மரணத் துக்கத்தின் தாக்கங்கள்

SKU: KP0017

62 65 5% OFF
🔒 Secure Checkout
📦 Careful Packaging
↩ Easy Returns
📚 Authentic Products

நபியவர்கள் வாழ்ந்த காலத்தில் இந்த உலகம் எப்படி இருந்தது, இன்று எப்படி இருக்கிறது என்பதை நாம் புரிந்திருக்கிறோமா என்ன? அக்காலத்தில் முஸ்லிம்களுக்குக் கண்ணியம் இருந்தது;
உயர்ந்த அந்தஸ்து இருந்தது. இன்றோ நமது நிலை அடர்ந்த இருட்டில் கிடக்கிறது. வல்லரசுகள் கருணை காட்ட வேண்டும் என்று ஏங்கிக்கொண்டிருக்கிறோம். அவர்கள் நம்மை அழித்துவிடுவார்களோ, அடிமைப்படுத்திவிடுவார்களோ என்று பயந்து நடுங்கிக்கொண்டிருக்கிறோம்.
நமக்கு வருகின்ற பாதிப்புகளைச் செய்தித்தாள்களில் பார்க்கலாம். செத்து மடிகிறவர்கள், அடக்கப்படுகிறவர்கள், கொடுமைக்குள்ளாகிறவர்கள், சூழ்ச்சியில் சிக்குகிறவர்கள் என்று அத்தனைக்கும் ஆளாகிறவர்கள் நாமே. இதெல்லாம் எதற்காக? நாம் அழிய வேண்டும் என்பதற்குத்தான். போதாக்குறைக்கு நம்முடைய நிலையைப் பார்க்க வேண்டுமே?
கூட்டம் கூட்டமாகப் பிரிவினையில் விழுந்து சாகிறோம். ஒவ்வொரு கூட்டமும் தன்னிடம் வைத்திருப்பதைக் கொண்டு திருப்தியடைகிறது; குதூகலிக்கிறது. இஸ்லாமியப் பெயரைச் சொல்லிக்கொண்டே இஸ்லாமும் அதன் அறிஞர்களும் அழைப்பாளர்களும் தாக்கப்படுகிறார்கள்.
– ஆசிரியரின் வரிகள் சில

முஸ்லிம் சமூகத்தில் நபிகளார் மரணத் துக்கத்தின் தாக்கங்கள்

Arabic Title مُصِيبَةُ مَوْتِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَأَثَرُهَا فِي حَيَاةِ الأُمَّةِ
Tamil Title முஸ்லிம் சமூகத்தில் நபிகளார் மரணத் துக்கத்தின் தாக்கங்கள்
Title Muslim samoogathi Nabigalaar Marana thukkathin Thaakangal
Author ஷெய்க் ஹுஸைன் அல்அவாஇஷா
Translator உஸ்தாத் அபூ நசீபா எம்.எஃப். அலீ
Edition 7th, 2022
Category Aeedah – Creed
Pages 64
Size 14 cm x 21.5 cm
Language Tamil
Binding Soft
Publisher Kugaivaasigal

இந்த புத்தகம் நபிகளாரின் மரணத்தால் முஸ்லிம் சமூகத்தில் ஏற்பட்ட ஆழமான உணர்ச்சிப் பாதிப்புகளையும் அதன் ஆன்மீக விளைவுகளையும் விவரிக்கிறது.

நபிகளாரின் மரணம் ஒரு சாதாரண பிரிவு அல்ல; அது முஸ்லிம் சமூகத்தின் இதயத்தையே குலுக்கிய நிகழ்வாகும். பலர் பிரியமானவர்களின் மரணத்தில் துக்கத்தால் துயருற்று, ஒப்பாரி எழுப்பி, வலியில் மூழ்கினாலும், நபிகளாரின் மரணத் துக்கம் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. அது நம்பிக்கையையும், மனவுறுதியையும், அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையையும் அதிகரித்தது.

ஷெய்க் ஹுஸைன் அல்அவாஇஷா அவர்கள் எழுதிய இந்தப் புத்தகம், நபிகளாரின் இழப்பின் தாக்கத்தை நேரில் அனுபவித்த நபித்தோழர்களின் மனநிலையையும், அவர்களின் எதிர்வினைகளையும் ஆழமாக விளக்குகிறது. இன்றும் முஸ்லிம் சமூகத்தில் துக்கத்தை வெளிப்படுத்தும் விதத்தில் நபிகளாரின் தாக்கம் எவ்வாறு உள்ளது என்பதையும் இந்தப் புத்தகம் சுட்டிக்காட்டுகிறது.

இந்த நூலை வாசிப்பது நமது மனவுறுதியையும், ஆன்மீக நம்பிக்கையையும் வலுப்படுத்தி, இழப்பின் வேதனையில் கூட நம்பிக்கையின் ஒளியை காண வழிவகுக்கிறது.

Customer Reviews

★★★★★
0 reviews
5
0%
4
0%
3
0%
2
0%
1
0%

No reviews yet. Be the first to share your experience.

Leave a Review

Your email address will not be published. Required fields are marked *

Price

1 62

View Cart
0