நூஹ் (அலை) அவர்கள் தம் மக்களிடையே நீண்ட காலமாக அழைப்புப் பணியை மேற்கொண்டபோதும் மக்கள் அவரைப் புறக்கணித்து சிலை வணக்கத்திலேயே ஈடுபட்டிருந்தனர். பின்பு நூஹ் (அலை) இறைவனிடம் பிரார்த்தனை புரிந்தார். இறைவனும் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டு நம்பிக்கையற்ற மக்களை அழித்தொழிக்க ஏற்பாடு செய்தான். இந்த வரலாற்றுச் சம்பவத்தை திருக்குர்ஆனின் வழியாக சிறுவர்களுக்கு அழகான வண்ணப் படங்களுடன் காட்சிப்படுத்தியுள்ளது இந்நூல்.