நபி இப்ராஹீம் (அலை) – அவரது மனைவி ஹாஜிரா (அலை) மற்றும் குழந்தை இஸ்மாயீல் (அலை) இருவரையும் பாலைவனத்தில் தன்னந்தனியாக விட்டுச் சென்றார். இது இறைவனின் கட்டளை என்றார். பிறகு இஸ்மாயீல் (அலை) அவர்களுக்கு கடுமையான தாகம் ஏற்பட்டது. ஹாஜிரா (அலை) அவர்கள் ஏழு முறை மலைக் குன்றுகளில் ஏறி இறங்கினார். தண்ணீர் கிடைக்கவே இல்லை. இறுதியில் இறைவனின் அருட்கொடையாக இஸ்மாயீல் (அலை) அவர்களின் கால்கள் தட்டிய இடத்தில் நீரூற்றை உருவாகியது. அதுவே இன்றுவரை மக்களுக்கு தண்ணீர் வழங்கிக் கொண்டிருக்கிறது. இது குறித்து திருக்குர்ஆனின் வழியாக சிறுவர்களுக்கு அழகான வண்ணப் படங்களுடன் காட்சிப்படுத்தியுள்ளது இந்நூல்.